டயானா கமகே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட நான்கு வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டாம் திகதி அந்த நான்கு வாகனங்களையும் ஒப்படைக்குமாறு சுற்றுலா அமைச்சு டயானா கமகேவிடம் தெரிவித்த போதிலும் அவர் அந்த வாகனங்களை ஒப்படைக்கவில்லை எனவும் டிஸ்கவரி ரக ஜீப், டபுள் கப் கார், பிராடோ ஜீப் மற்றும் நிசான் ரக கார் என்பவற்றை டயானா கமகே இதுவரை கையளிக்கவில்லை.
இதேவேளை, டபுள் கெப் விபத்துக்குள்ளாகி தற்போது குருநாகல் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




