மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மன்னார் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பள்ளிமுனை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 62 வயதுடைய எஸ்.ஜோன்சன் என்ற நபரே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மீனவர் மேலும் சில மீனவர்களுடன் படகில் சென்று கொண்டிருந்த போது, மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக கடல் கொந்தளித்து, ஒரு படகு கடலில் கவிழ்ந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




