‘உங்கள் நாட்டுக்கு திரும்புங்கள்’: பிரான்சில் இலங்கையர் வீட்டு சுவரில் நாஜி சின்னத்துடன் எச்சரிக்கை வாசகம்!

Date:

பிரான்சின் Oise பிரதேசத்தில் உள்ள Clermont பகுதியிலுள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டின் சுவர்களில் நாஜி அர்த்தங்களைக் கொண்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன், நாஜி சின்னங்களும் வரையப்பட்டுள்ளன.

“Out with the paks paks -அவுட் வித் த பாக்ஸ் பாக்ஸ்“ (பாகிஸ்தானியராகக் கருதப்படும் நபர்களை அவமதிப்பு செய்யும் அர்த்தம்) மற்றும் உங்கள் நாட்டிற்குத் திரும்பு”, அல்லது “ஆக்கிரமிப்பாளரின் மரணம்” என எழுதப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைத் தமிழ் குடும்பம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளது.

எனினும், பிரதேசத்திலுள்ள மக்கள் அந்த இலங்கைக் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“உங்கள் வீட்டின் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், எங்கள் சுற்றுப்புறத்தில் வெறுப்பு மற்றும் இனவெறிக்கு இடமில்லை” என்று அவர்கள் அங்கு திரண்டு, இலங்கைக் குடும்பத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

“இந்த மோசமான செயல் பிரான்சின் இருண்ட நேரத்தை நினைவுபடுத்துகிறது,” என்று அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்த வாசகங்களை எழுதியவர் என கருதப்படுபவர், சில நாட்களின் முன்னர் நகரின் பிற இடங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராகவும் வாசகங்களை எழுதியுள்ளார். இரண்டு கையெழுத்துக்களும் ஒரே விதமாக உள்ளன.

கிளெர்மாண்டின் மேயர், லியோனல் ஆலிவியர், இந்த சம்பவங்கள் தொடர்பாக நகரசபை முறைப்பாடு செய்து, விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றார்.

Beauvais அரசு வழக்கறிஞர் “இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை இயல்பின் பொது அவமதிப்பு” மற்றும் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” ஆகிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியதாக உறுதிப்படுத்துகிறார். “எனினும், எழுதியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என்றும் அரசுத் தரப்பு குறிப்பிடுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்