பலாங்கொடை பெட்டிட்டிகல பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிய தகராறு முற்றி ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை பெட்டிட்டிகல மஸ்ஸன்ன பிரிவில் வசித்து வந்த வேலாயுதன் நந்த கிருஷ்ணன் என்ற 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றி மற்றுமொரு நபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




