இயக்கத்துக்கும், ஜேவிபிக்கும் வித்தியாசமில்லையாம்: சொல்பவர் நாமல்!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) எந்த வேறுபாடும் இல்லை என பொதுமக்களால் ஆட்சியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசான, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவை இரண்டும் பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் தனிநபர்களைக் கொல்வது உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டன என்கிறார்.

விடுதலைப் புலிகளைப் போன்று ஜே.வி.பி.யும் மகா சங்கத்தினர், சாதாரண பிரஜைகள் மற்றும் பஸ்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகரான ஜே.வி.பி., அழிவுகரமான நடத்தையின் வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், நாட்டை அழிவுக்குக் காரணமானவர்களிடம் ஒப்படைப்பதா அல்லது தேசத்தை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சில அரசியல் கட்சிகள் வெறும் தற்பெருமை மூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்கத்தை கவிழ்க்க முடிந்த அத்தகைய தற்பெருமைக்காரர்களின் ஒரு பிரிவினரை அவர் விமர்சித்தார், அவர்கள் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார்.

ராஜபக்ச குடும்ப ஆட்சியில் பழிவாங்கல் கொலைகள் நடந்ததாக பரவலான விமர்சனங்கள் இருந்தன. ஊழல் பற்றிய பெரும் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இறுதியில் பொதுமக்கள் எழுச்சியின் மூலம் ராஜபக்ச குடும்பம் தப்பியோடி தலைமறைவானது. நீண்டகாலம் மௌனமாக இருந்த ராஜபக்சக்கள் மீண்டும் மூச்சுவிட ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்