27 வயது காதலியை கொன்ற 22 வயது காதலன் கைது!

Date:

சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறை ஒன்றில் இரண்டு பிள்ளைகளின் தாயை கொன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிக அளவு வலி நிவாரணிகளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் அது.

மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 14ஆம் திகதி ரத்தலோவ முத்துவடியா வீதியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் படுகொலை செய்யப்பட்டார்.

அநுராதபுரம் பாமுகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்ற பெண்ணே கொல்லப்பட்டார்.

22 வயதுடைய இந்த இளைஞனுடன், அந்தப் பெண்ணுக்கு சில காலமாக தொடர்பு வைத்திருந்த இளைஞனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சீதுவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

காதலியை கொன்ற பின்னர், அந்த அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்யும் நோக்கத்துடன் அறைக்குள் தூக்கு கயிறு மாட்டியுள்ளார். பின்னர் மனதை மாற்றி, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர், நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி இரவு இந்த அறையில் இருந்த சந்தேக நபர் மறுநாள் காலை அறையை விட்டு வெளியேறியதை தங்கும் அறையின் உரிமையாளர் பார்த்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்