பண்டைய காலத்தில் அரசனின் உத்தரவுகள் முரசறைந்து அறிவிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வழக்கத்தின் தொடர்ச்சியாக, நீதிமன்ற அமைப்புக்கள் உருவான காலப்பகுதியில் முரசறைந்து நீதிமன்ற உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது அந்த வழக்கம் இல்லை.
ஆனால், நேற்று (12) அநுராதபுரம் மாவட்டத்தின் கிழக்கு நுவரகம் பிராந்திய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் இந்தவகை காட்சியை காண முடிந்தது.
தர்மபால மாவத்தையில் உள்ள முதல்வழிப் பகுதியில் அமைந்துள்ள நிலப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதால், தனத்தனியாக நீதிமன்ற அறிவிப்பு செய்யாமல், இருந்தால், அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பறை மேள வகை வாத்தியம் அடிக்கப்பட்டு, உத்தரவு அறிவிக்கப்பட்டது.




