நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கணனிகள் மற்றும் கைப்பேசிகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 இந்திய பிரஜைகளை தலங்கம பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், சந்தேகநபர்களுடன் 35 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 மடிக்கணினிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் நாட்டில் உள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




