தங்கக்கடத்தல் எம்.பியை பதவிநீக்க இடைக்கால தடை!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல் ரஹீம் அலி சப்ரியை கட்சியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அலி சப்ரி தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் றிசாத் பதுர்தீன், காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நைனாமுல்லா ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெளியேற்றக் கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் பிற சட்டங்களை மீறி நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பொருந்தாத நடத்தையில் ஈடுபட்டதன் மூலம் கட்சி ஒழுக்கம் கடுமையாக மீறப்பட்டுள்ளதால் ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இடைக்கால தடை நடைமுறையில் இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்