மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி, மியான்குளம் சந்தியில் நேற்று (26) திங்கள் கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சைவ மத குருக்கள்மார் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மரண வீடொன்றிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரானிலுள்ள தமது வீடுகளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி பயணித்த கனரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ட்டுள்ளது.




