நேற்று (22) பெலியத்தவில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்ததிற்கு தலைமை தாங்கிய நபர் கைது செய்யப்பட்டதுடன், இதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பஜிரோ ஜீப்பையும் பொலிசார் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர் குற்றத்தை செய்ய வந்த வாகனத்தின் சாரதியாகவே திட்டமிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




