திருகோணமலையில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) விளையாட்டு ஆரம்பம் (VIDEO)

Date:

திருகோணமலை, சம்பூரில் இன்று (6) ஏறுதழுவும் (ஜல்லிக்கட்டு) வீர விளையாட்டு இடம்பெறுகிறது.

தென்னிந்தியாவின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், இலங்கையில் நடைமுறையில் இல்லை. எனினும், இம்முறை முதல்முதலாக சம்பூரில் நடைபெறுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தென்னிந்தியாவில் தனது பூர்வீக பிரதேசத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் செந்தில் தொண்டமான், தென்னிந்திய ஜல்லிக்கப்பட்டு போட்டிகளில் தனது காளைகளை களமிறக்குவதுடன், அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுனராக பதவிவகிக்கும் அவர், சம்பூரிலும் ஜல்லிக்கப்பட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் 200 வரையான காளைகள் பங்கேற்கின்றன.

இதேவேளை, இலங்கை தமிழ் மக்கள் தமது பாரம்பரிய அடையாளங்களை மறந்து, தென்னிந்திய மாயவலைக்குள் சிக்குகிறார்கள் என்ற குரல்கள் பரவலடைந்துள்ள காலகட்டத்தில் இந்த நிகழ்வு நடப்பது, கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்