காயான்கேணியில் மினி சூறாவளி

Date:

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரை பிரதேசத்தில் இன்று (6) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக படகுகள் சில சேதமடைந்துள்ளதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை வேகமான காற்று வீசியதுடன் மழையும் பெய்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரையோரப் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் 06 படகுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு படகு அதன் இயந்திரம் போன்றன பெருமளவு சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனையவை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் ஓலைக் கொட்டில் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசைகள் என்பன சேதமடைந்து காணப்படுகிறன. சேதமடைந்த தங்களது படகினை திருத்தம் செய்து மீள பாவிப்பதற்கு தங்களிடம் போதியளவு பணமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அச்சம் காரணமாக மீனவர்கள் இன்று அதிகாலை கடல் தொழிலுக்கு செல்லவில்லை.

சம்பவம் பற்றி வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-க.ருத்திரன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்