மக்களை ஏமாற்றும் வேலையை ஆரம்பித்துள்ள அரசு!

Date:

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்கம் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தில் பத்து வீத நிவாரணத்தை வழங்கவுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டை தேர்தல் ஆண்டாக அரசு அறிவித்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக, எவ்வளவு வரிகள் அதிகரிக்கப்பட்டாலும், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அரசு முயல்கிறது. அதற்குக் காரணம் அடுத்தது தேர்தல் ஆண்டு.

குருநாகலில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்மூலம் மக்களை ஏமாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளது என்பது தெளிவாகின்றது. முதல்கட்டமாக ஜனவரி முதல் மின்கட்டணத்தில் பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருளின் விலையை ஓரளவு குறைக்கும் நம்பிக்கை இருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்