கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.25 கோடியை தூக்கிக் கொடுத்து விட்டு வந்த பெண்!

Date:

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்தியப் பெண்ணுக்கு எதிரான சுங்க விசாரணையின் போது 11 கோடியே எண்பது இலட்சம் ரூபா தண்டப்பணத்தை உடனடியாக செலுத்தியதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். .

இந்த இந்தியப் பெண் நேற்று (22) அதிகாலை டுபாயிலிருந்து 5 கிலோ 500 கிராம் எடையுள்ள நகைகளை தனது உடலிலும் கைப் பையிலும் மறைத்துக்கொண்டு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பான சுங்க விசாரணை கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் கமால் பெர்னாண்டோவினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகளை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர், பதினொரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இந்த இந்தியப் பெண் கொண்டு வந்த நகைகளின் மொத்தப் பெறுமதி மற்றும் அபராதத் தொகை இருபத்தி நான்கு கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்