இந்தியா உலக கோப்பையை வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என தெலுங்கு நடிகை ரேகா போஜ் தெரிவித்துள்ளார்.
13 வது உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இந்த நேரத்தில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன். இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த கமெண்ட்டை பார்த்த பலர் ரேகா போஜ் தனது சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால் ரேகா போஜ் இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன்.நான் பரபரப்புக்காக செய்யவில்லை என்றார்.அதற்கு நெட்டிசன்கள், நாங்கள் நிச்சயம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வருகிறோம் என்றனர்.
மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட படங்களில் ரேகா போஜ் நடித்துள்ளார்.