14 வயது மனைவி குழந்தை பிரசவம்: 18 வயது கணவன் கைது!

Date:

சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டு அவரை தாயாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட 14 வயது 07 மாத வயதுடைய சிறுமி, குழந்தை பிரசவித்துள்ளார்.

அதன்படி புத்தளம் வைத்தியசாலை பொலிஸாரால் இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் தன்னை திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் அவர்களது திருமணச் சான்றிதழ் மற்றும் சிறுமியான மனைவியின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்