சம்பள உயர்வுகோரி இன்று 300 அரச நிறுவன ஊழியர்கள் போராட்டம்

Date:

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயர்வால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.20,000 சம்பள உயர்வு அல்லது ரூ.20,000 கொடுப்பனவு கோரி சுமார் 300 அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் செத்சிறிபாய, நாரஹேன்பிட்டி சந்தி, லிப்டன் சுற்றுவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் இன்று மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட போதிலும், 7 வருடங்கள் கடந்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், இந்தக் கோரிக்கைக்கு மேலதிகமாக 2016ஆம் ஆண்டு இழந்த முழு ஓய்வூதிய முறையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சூரியாராச்சி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்