இலங்கையில் தற்போது உயிர்வாழும் மிக வயதான தந்தையென 109 வயதான மாகல கொட்டாச்சி நந்தியாஸ் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
தேசிய முதியோர் செயலகம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
காலி, கப்பெட்டியகொடவை வசிப்பிடமாகக் கொண்ட மாகல கொட்டாச்சி நந்தியாஸ், ஜூன் 3, 1914 இல் பிறந்ததாக அவரது அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டள்ளது.
இப்போதும் மிகவும் ஆரோக்கியமாக வாழும் நந்தியாஸ், தொழிலில் ஒரு விவசாயி.
இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.




