நல்லூரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட மான்கள்: மயக்க ஊசி செலுத்தியதால் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த மூன்று மான்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மூன்று மான்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், இந்த மூன்று மான்களும் அவற்றை வளர்த்த நபருடன் கைது செய்யப்பட்டன.

பின்னர் மான்களை வாகனத்தில் கொண்டு செல்ல வசதியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அவற்றில் ஒரு மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. ஏனைய இரண்டு மான்களும் பின்னர் இறந்தன.

இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.ஈ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்