நல்லூர் உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்காக பணம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்: பொலிஸ்காரர் மீது முறைப்பாடு!

Date:

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உணவகத்தில் உணவருந்தி விட்டு, பணம் தராமல் சென்றதாகவும், பணத்தை கேட்டபோது தாக்குதல் நடத்தியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இன்று (23) இந்த சம்பவம் நடந்தது.

திருவிழா தொடங்கிய பின்னர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது உணவகத்தில் உணவருந்தி விட்டு பணம் தராமல் செல்வதாகவும், தொடர்ந்து அதை அனுமதிக்க முடியாதென்பதால் இன்று பணம் கேட்டதாகவும் உணவகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உணவருந்தி விட்டு, மீண்டும் கடமைக்கு சென்ற போது, உணவக ஊழியர் ஒருவர் அங்கு சென்று, சாப்பிட்ட உணவுக்கான பணத்தை கேட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பொலிஸ்காரர் உணவக ஊழியரை தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்