பல குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் பிடியாணை பெற்ற சந்தேகநபர் ஒருவரை சுட்டுக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேகநபர், அதற்கான பணத்தை தேடும் நோக்கில் பொலிஸ் அதிகாரி போல் நடித்து நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி அதில் பயணிக்கும் நபர்களின் உடமைகளை கொள்ளையடித்து பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். .
சந்தேக நபரின் வலது விலா எலும்பில் தோட்டா தாக்கியதாகவும், சந்தேக நபர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




