யாழ்ப்பாணம், பலாலி வீதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாலி வீதி, கோண்டாவில் சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துசபை பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளாகின.
இ.போ.ச கோண்டாவில் சாலையிலிருந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பதுளைக்கு சேவையில் ஈடுபடவிருந்த பேருந்தும், இருபாலை பக்கமிருந்து கோண்டாவில் சந்திக்கு வந்த வைத்தியர் ஒருவரின் காரும் மோதின.
பேருந்தால் மோதப்பட்ட கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரின் கால் முறிந்தது. காரை செலுத்தி வந்தவரும் காயமடைந்தார். இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.




