பிள்ளையான் உட்பட 3 பேருக்கு சூம் ஊடாக மீண்டும் 24 வரை விளக்கமறியல் — இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடிவிறாந்து பிறப்பிப்பு

Date:

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் இன்று திங்கட்கிழமை (13)  காணொளி ஊடாக உத்தரவிட்டு இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.

2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட  சம்பவங்களுடன்  தொடர்புபட்ட ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்ததையத்து அவர்களை யூன் 30; திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட்ட 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற  நிலையில் இன்று திங்கட்கிழமை (13) மட்டக்களப்;பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதவான்; எடுத்துக் கொண்டபோது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளயான முகமட் சிபான், மட்டும் ஆஜர்படுத்திய சிஜடி யினர் பிள்ளையான் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாதது தொடர்பாக நீதிமன்றிற்கு தெரிவித்தனனர்

இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் மற்றைய சந்தேகநபர் ஆகிய இருவரையும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ்  பாய்ஸ்க்கு பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்

இதேவேளை கடந்த 30; திகதி பிள்ளையானை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் உட்பட 3 பேரையும் சிஜடியினர் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்