பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பின்னர், அந்த நாட்டின் ஒருநாள் கப்டன் தமிம் இக்பால் தனது ஓய்வை வாபஸ் பெற்றதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பிரதமருடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல்வாதியும், முன்னாள் கப்டனுமான மஷ்ரஃப் பின் மோர்டாசாவுடன் தமீம் உடன் இருந்தார்.
ஓகஸ்ட் 31 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பைக்குத் திரும்புவதற்கு முன்பு தமிம் இப்போது ஒன்றரை மாத இடைவெளி எடுத்துக்கொள்வார்.
பிரதமர் ஹசீனாவுடனான சந்திப்பிற்குப் பிறகு, தமீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “மாண்புமிகு பிரதமர் இன்று மதியம் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்தார். அவருடன் வெகுநேரம் பேசினோம். விளையாட்டுக்குத் திரும்பும்படி அவர் என்னை அறிவுறுத்தினார். தற்போது எனது ஓய்வை வாபஸ் பெறுகிறேன்.
நான் எல்லோரிடமும் இல்லை என்று சொல்ல முடியும், ஆனால் நாட்டின் மிக முக்கியமான நபரின் கோரிக்கையை என்னால் நிராகரிக்க முடியாது. பாபோன் பாய் (நஸ்முல்) மற்றும் மஷ்ரஃபே பாய் ஆகியோரும் ஒரு பெரிய பாத்திரத்தை வகித்துள்ளனர். மஷ்ரஃபே பாய் என்னை அழைத்து வந்தார், பாபோன் பாய் என்னுடன் இருந்தார். நான் மனதளவில் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக இருக்க பிரதமர் எனக்கு ஒன்றரை மாதங்கள் ஓய்வு கொடுத்தார் என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னணியில் தமிம் இக்பால் தனது அதிர்ச்சியான ஓய்வு அறிவிப்பை வியாழன் பிற்பகல் அறிவித்தார்.
“இது எங்களுக்கு நிம்மதியான விஷயம். கப்டன் இல்லாமல் நாங்கள் எப்படி விளையாட முடியும்! செப்டம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடருடன், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கியமான உலகக் கோப்பையுடன் பங்களாதேஷ் சில மாதங்களுக்கு பிஸியாக இருக்கும்“ என்று நஸ்முல் கூறினார்.
“அவருக்கு உடல் தகுதி இல்லாததாலும், சரியான மனநிலையில் இல்லாததாலும், ஒன்றரை மாதங்கள் ஓய்வு எடுத்தார். அவர் தன்னை ரீசார்ஜ் செய்து கொண்டு விரைவில் எங்களுடன் இணைவார் என நம்புகிறேன்.
அவரது பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்த பிறகு, அவர் உணர்ச்சிவசப்பட்ட ஒரு முடிவை எடுத்தார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நேருக்கு நேர் சந்தித்தால் இதற்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மாண்புமிகு பிரதமரின் மூலம் அவருடன் பேச முடிந்தது. அவர் ஓய்வு பெறவில்லை” என்றார்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் பங்களாதேஷின் சூப்பர் ஸ்டார் தமிம் இக்பால் என்பது குறிப்பிடத்தக்கது.




