தங்போது மழை பெய்து வருவதால் சுற்றடலில் உள்ள நுளம்பு பெருகும் இடங்களை சுத்தம் செய்து, நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் குறைவானடெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வருடத்தி 1132 பேர் யாழ் மாவட்டத்தில் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாகவும், நீர்கொழும்பை சேர்ந்த பெண் சிப்பாய் விடுமுறையிலிருந்து யாழ்ப்பாண முகாமுக்கு திரும்பிய பின் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
மலேரியா நோய் பரவல், மலேரியா பரவும் நாடுகளுக்கு செல்பவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.




