தேடப்பட்டு வந்த இருபாலை கானான் ஜெப ஆலயத்தின் 80 வயதான போதகர் கைது!

Date:

யாழ்ப்பாணம்- இருபாலையில் இயங்கி வந்த கானான் ஜெப ஆலயத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கானான் ஜெய ஆலயத்தின் மாணவர் விடுதி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே இயங்கியது. சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக செயற்பட்டிருந்தது.

அந்த விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பிச்சென்றதையடுத்து இந்த விடயம் வெளிப்பட்டது.

3 சிறுமிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 80 வயதான தலைமைப் போதகர் தகாத முறையில் செயற்பட்டு, பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தலைமைப் போதகரை கைது செய்ய பொலிசார் முயன்ற போது, அவர் இருபாலையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினார்.

கொழும்பில் போதகர் நேற்று கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றமொன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது கடவுச்சீட்டை முடக்கிய நீதிமன்றம், அவரை பிணையில் விடுவித்ததுடன், யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றமொன்றில் உடனடியாக சரணடையுமாறு அறிவித்தது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்