பொலிசாரிடம் சிக்கிய இளைஞனின் கைபேசிக்கு போதைப்பொருள் கேட்டு வந்த 50 அழைப்புக்கள்!

Date:

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிக்கு,  ஐஸ் போதைப்பொருள் தருமாறு கேட்டு சுமார் 50 பேர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஹலவத்த உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்த அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தெரியாமல் போதைப்பொருள் கேட்டு அழைப்புகளை விடுத்ததாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஐஸ் போதைப்பொருளை கேட்டதாக கூறப்படும் நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, 19 வயதுடைய இளைஞன் ஒருவரைக் கைதுசெய்து அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த 23 வயதுடைய இளைஞரும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்