தினேஷ் ஷாஃப்டர் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 2 பொலிஸ் குழுக்கள்!

Date:

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளது.

ஷாஃப்டரின் தொலைபேசி பதிவுகளை மதிப்பீடு செய்வதற்கும் தடயவியல் பகுப்பாய்வு செய்வதற்கும் இரு குழுக்களும் நியமிக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பொரளை மயானத்தினுள் தினேஷ் ஷாஃப்டர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மற்றும் அவரது கைகள் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

அவரைக் கண்டுபிடித்த சக ஊழியர், ஷாஃப்டரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தார்.

எனினும், 51 வயதான தினேஷ் ஷாஃப்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

வாகனத்திற்குள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு, கொலைப் புலனாய்வுப் பிரிவினர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, தனது "போதைப்பொருள் மீதான போர்"...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்