தனித்து போட்டியிட வேண்டும்: தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் வலியுறுத்தல்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சில தரப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல கட்சிகள் கூட்டணியமைத்தால், போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என கருதப்படும் இரண்டாம் நிலை தமிழ் அரசு கட்சியினர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்த்து, இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாடு பலத்த சர்ச்சையை தோற்றுவித்த நிலையில், இது குறித்த இறுதி முடிவை கட்சியின் மத்திய குழுவில் முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இன்று மட்டக்களப்பில் நடக்கும் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென பெரும்பாலானவர்கள் வலியுறுத்தினர்.

தேர்தலில் தனித்து போட்டியிட்ட பின்னர், ஆட்சியமைக்கும் போது கூட்டமைப்பாக ஆட்சியமைக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்