பொது நிதியை விருந்துகள், ஒன்றுகூடல் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள், கடமைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பிரியாவிடை விருந்துகள் உட்பட பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்வதை நிறுத்துமாறு அனைத்து பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன கையொப்பமிட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையில் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், சட்டப்பூர்வ சபைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரச வங்கிகள் என்பன எந்த வகையான விழாக்களுக்கும் பொதுப் பணத்தையோ அல்லது அரசாங்கத்தின் பணத்தையோ செலவிடக் கூடாது.
ஏப்ரல் 26 மற்றும் ஓகஸ்ட் 8 மற்றும் 15 ஆம் திகதியிட்ட முந்தைய சுற்றறிக்கைகள் மூலம் இதே போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன, ஆனால் சில நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறியுள்ளன என்று நவம்பர் 25 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க செலவினங்களை கண்டிப்பாக கட்டுப்படுத்த கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.



