அண்மையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளிற்கு லைக்கா நிறுவன உரிமையாளர் நிதியுதவியளித்துள்ளார்.
பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அண்மையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த இந்த அரசியல் கைதிகளிற்கு லைக்கா நிறுவன உரிமையாளர் நிதியுதவியளித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹொட்டலில் குறிப்பிட்ட அரசியல் கைதிகளிற்கு மதிய போசனமளித்து, நிதியுதவியுமளித்தார்.
அந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை, 8 தமிழ் அரசியல் கைதிகளிற்கும் தலா ரூ.25 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



