சில மணித்தியாலத்தில் பலமுறை வல்லுறவு: கற்ற வித்தைகளை அவுஸ்திரேலியாவில் மொத்தமாக இறக்கிய குணதிலக!

Date:

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் கிழக்கு புறநகர் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் ரோஸ் பேயில் 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை குணதிலகவை புலனாய்வாளர்கள் கைது செய்தனர்.

உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்றில் இலங்கை தனது கடைசி ஆட்டத்தை, சிட்னி  மைதானத்தில் இங்கிலாந்துடன் ஆடியது. ஆட்டத்தில் இலங்கை தோற்ற பின்னர், அதிகாலை 1 மணிக்கு முன்னதாக சிட்னி சசெக்ஸ் தெருவில் உள்ள ஹோட்டலில் குணதிலகாவை கைது செய்தனர்.

இலங்கை அணி காலை 6 மணி விமானத்தைப் பிடிக்க, 3.30 மணிக்கு ஹொட்டலை விட்டு புறப்படவிருந்த சமயத்தில் இந்த கைது இடம்பெற்றது.

ஒன்லைன் டேட்டிங் ஆப் மூலம் தொடர்பில் இருந்த பெண்ணையே குணதிலக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார்.

அவர்கள் ஹொட்டல் ஒன்றில் சந்தித்து மது அருந்திய பின்னர், ரோஸ் பேயில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து, குணதிலக சில மணிநேரங்களில் பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிசார் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்கள்.

குணதிலக சிட்னி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

திங்களன்று வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் அவருக்கு பிணை மறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றப்பிரிவு துப்பறியும் கண்காணிப்பாளர் ஜெய்ன் டோஹெர்டி கூறுகையில், அந்த பெண் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தார். பொது இடத்தில் சந்திப்பதற்கும், சந்திப்பதற்கும் பல நாட்களுக்கு முன்பு குணதிலகவை தொடர்புகொள்வளும் போதும் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தார்.

“இது துரதிர்ஷ்டவசமானது. டேட்டிங் பயன்பாட்டில் சந்திப்பதற்கும் அல்லது வேறு எதற்கும் எந்த தொடர்பும் இல்லை, ”என்று அவர் கூறினார்.

இங்கிலாந்திடம் தோற்று இலங்கை அணி மீண்டும் தங்களுடைய ஹோட்டலுக்கு வந்த பின்னரே கைது இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் புறப்பட்ட நிலையில், இலங்கை வீரர்களும் நிர்வாகமும் பொலிசார் கைது செய்ய வந்தபோது அதிகாலை 3.30 மணிக்கு புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணிக்கு ஒருவரை கைது செய்வது வழக்கத்திற்கு மாறானதா என்று கேட்டதற்கு, கண்காணிப்பாளர் டோஹெர்டி கூறினார்: “நாங்கள் 24-7 வரை செயற்படுகிறோம்.”

“போலீசார் விசாரித்து, ஒரு வழக்கு இருப்பதாக நாங்கள் நிறுவியவுடன், நாங்கள் கைது செய்தோம்,” என்று அவர் கூறினார்.

திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை அணியின் மற்ற வீரர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தனுஷ்க குணதிலக பாலியல் புகாரில் சிக்குவது இது முதல்முறையல்ல. சில மாதங்களின் முன்னர் இலங்கையில் பாலியல் புகாரை எதிர்கொண்டார். ஹொட்டலொன்றில் நிறைவெறியில் அழகிய பெண்ணை பார்த்து சிரித்ததாகவும், அந்த பெண் சிரிக்க, அவரது கையை பிடித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அந்தப் பெண் மறுத்த போது, “நான் யார் தெரியுமா?“ என சவடால் விட்டதாகவும், பெண் தனது சகோதரர்களிற்கு தொலைபேசியில் அறிவிக்க, அவர்கள் ஹொட்டலிற்கு வந்து, குணதிலகை குதறி எடுத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

வைத்தியசாலைக்கு செல்ல வெட்கப்பட்ட குணதிலக, பாரம்பரிய சிகிச்சை பெற்று தேறியதாகவும் அப்போது கூறப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்