ஆப்கான் அணித் தலைவர் விலகினார்!

Date:

ரி20 உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் கப்டன் பதவியில் இருந்து விலகுவதாக முகமது நபி அறிவித்தார்.

ரி20 உலகக் கோப்பை 2022 இன் சூப்பர் 12 போட்டியில் அடிலெய்டில் அவுஸ்திரேலியாவிடம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் கப்டன் முகமது நபி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

“எங்கள் ரி20 உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. நாமும் எங்கள் ஆதரவாளர்களும் எதிர்பார்க்காத முடிவு. போட்டிகளின் முடிவுகளால் உங்களைப் போலவே நாங்களும் விரக்தியடைந்துள்ளோம்,” என்று நபி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

நபி 35 ரி 20 போட்டிகளில்  அணிக்கு கப்டனாக இருந்தார் .- இதில் 16 போட்டிகளில் ஆப்கான் வெற்றி பெற்றது.

நபி தனது ட்வீட்டில், “தேர்வுக் குழுவும் நானும் அணி சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்திய ஒரே பக்கத்தில் இல்லை” என்று விளக்கினார்.

எவ்வாறாயினும், அவர் ஒரு வீரராகத் தொடர்வார் என்றும், “நிர்வாகம் மற்றும் அணிக்குத் தேவைப்படும்போது” இருப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்