காதுக்குள் புகுந்த பூச்சியை வெளியேற்றுவது எப்படி?

Date:

யானை மிகப்பெரிய விலங்காக இருந்தாலும், அதன் காதுக்குள் சிறிய எறும்பு நுழைந்தால், அதோகதிதான். யானையின் நிலைமையே இப்படியென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்… துடிதுடித்துப் போய்விடுவோம்.

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்… விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வேலுமணி.

“காதுக்குள் பூச்சியோ, எறும்போ நுழைந்துவிட்டால், காது நிறைய எண்ணெய் அல்லது உப்புக் கரைசலை ஊற்றிப் பார்க்கலாம்; அதனால், பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்துவிடும். அதை எளிதாக வெளியே எடுத்துவிடலாம். இது, எறும்பு மற்றும் சிறு பூச்சிகளுக்கு மட்டுமே பலனளிக்கும். பெரிய பூச்சிகள், வண்டுகள், உண்ணிகளை வெளியேற்ற உதவாது.

பெரிய பூச்சிகள் காதுக்குள் நுழைந்துவிட்டால், அவை காதிலுள்ள ஜவ்வுகளைப் பிடித்துக்கொண்டு உள்ளேயே தங்கிவிடும். சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக காது, மூக்கு தொண்டை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அட்வான்ஸ்ட் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் பூச்சியை வெளியே எடுத்துவிடலாம்.

குழந்தைகளின் காதுக்குள் பூச்சி நுழைந்தால், மயக்க மருந்து கொடுத்து எடுக்க வேண்டியிருக்கும். பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றைக் காதில் நுழைத்து, பூச்சியை எடுக்க முயலும்போது உள்காதிலுள்ள மென்மையான பகுதிகள் பாதிக்கப்படலாம், காதில் காயம் ஏற்படலாம்“ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்