28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

‘அயோத்தியில் பாபர் செய்ய விரும்பியதை கோணேச்சரத்தில் நீங்கள் செய்தால் அமைதியாக இருக்க மாட்டோம்’: இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த எச்சரிக்கைக் கடிதம்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசு ஆக்கிரமிக்க முயன்றால், 1200 மில்லியன் இந்துக்களும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என, இந்தியாவிலுள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரித்துள்ளார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்திலேயே மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“பௌத்த விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய திட்டத்தின் ஒரு பகுதியாக பாராளுமன்றத்தில் பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட இலங்கை அரசாங்கம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் செய்ததைச் செய்ய விரும்பினால், நாங்கள், 1200 மில்லியன் உலகளாவிய இந்துக்கள், எங்கள் கண்களையும் காதுகளையும் மூடி அமைதியாக இருக்க மாட்டோம், ”என்று கடிதத்தில் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த 400 ஏக்கர் நிலத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Pagetamil

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Pagetamil

உடமையில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் குற்றவாளி என வவுனியா நீதிமன்றில் தீர்ப்பு: மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை!

Pagetamil

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!