ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது.
சந்தேக நபர்கள் நேற்று நவகத்தேகம மற்றும் எலயபட்டுவ பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள். நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ஊடகவியலாளர் கீத் நொயர் 2008 ஆம் ஆண்டு தெஹிவளை, வைத்தியா வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் கடத்தப்பட்டார்.



