27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இந்தியா

ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிணையில் விடுதலை!

200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினார்.

சமீபத்தில், அமலாக்க இயக்குனரகம் (ED) இந்த வழக்கில் தனது இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று அவருக்கு 50,000 ரூபாய் பிணையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

அமலாக்க இயக்குனரகம் (ED) பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. பரிசுகள் மற்றும் சொத்துக்களை பெர்னாண்டஸ் பெற்ற குற்றத்தின் “வருமானங்கள்” என்று அது குறிப்பிட்டது. கடந்த டிசம்பரில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரவீன் சிங் முன்னிலையில் அமலாக்கத்துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

பின்னர், பெப்ரவரியில், பெர்னாண்டஸுக்கு அவரை அறிமுகப்படுத்திய சந்திரசேகரின் உதவியாளர் என்று கூறப்படும் பிங்கி இரானியிடமிருந்து பரிசுகள் பெற்றமைக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையின் படி, பிங்கி பெர்னாண்டஸுக்கு விலையுயர்ந்த பரிசுகளைத் தேர்ந்தெடுத்து, சந்திரசேகர் பணம் செலுத்திய பிறகு அவற்றை ஜாக்குலின் வீட்டில் சேர்ப்பித்து விடுவார்.

சுகேஷ் வெவ்வேறு  மொடல்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்காக சுமார் 20 கோடி செலவு செய்துள்ளார், அதை ஒரு சிலர் ஏற்க மறுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

வங்காள விரிகுடாவில்  நிலநடுக்கம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!