யாழ் வாசியின் கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

Date:

இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் பிரவேசிக்க முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

45 வயதான சந்தேக நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டார்.

சந்தேக நபர் குவைத்தில் இருந்து கொழும்பு வந்த விமானத்தில் நாட்டுக்கு வந்தார்.

சந்தேக நபர், போலி புகைப்படத்துடன் கூடிய இலங்கை கடவுச்சீட்டை சமர்ப்பித்த போதும், அது போலியானது என அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது

குவைத்தில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் வழங்கிய அடையாளச் சான்றிதழை அவரது பொதிகளில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

குவைத்தில் உள்ள தரகர் ஒருவர் ஊடாக இலங்கை கடவுச்சீட்டை பங்களாதேஷ் பிரஜை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கடவுச்சீட்டு யாழ்ப்பாணத்தில் வசிப்பவருக்கு சொந்தமானது என குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

எனினும், சந்தேக நபர் அவர் வந்த அதே விமானத்தில் குவைத்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்