இன்று (28) இரவு மின்வெட் டுநேரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின் தேவை குறைந்ததாலும், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தொடங்கப்படுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வாரம் எவ்வாறு மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




