’50 வருட அரசியல் அனுபவம் வெளிப்பட்ட உரை’: ரணிலை நேரில் வாழ்த்திய சாணக்கியன்!

Date:

ரணில் விக்ரமசிங்கவின் 50 வருட அரசியல் அனுபவம் அவரது கொள்கை விளக்க உரையில் வெளிப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் கொள்கை விளக்க உரையை ஆற்றியிருந்தார்.

இதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தேனீர் விருந்து வழங்கப்பட்டது.

அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சென்று கைலாகு கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், ரணிலின் கொள்கை விளக்க உரை சிறந்தது என பாராட்டு தெரிவித்தனர்.

இதன்போது, சாணக்கியன், ரணிலின் 50 வருட அரசியல் அனுபவம் அந்த உரையில் வெளிப்பட்டதாக ரணிலிடம் தெரிவித்தார்.

ரணில் புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னர், கூட்டமைப்பின் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாவகாசமாக ஜனாதிபதி உட்கார்ந்து பல விடயங்களை பேசினார். இதன்போது, என்னை எதிர்ப்பதாக வெளியில் சில கூட்டமைப்பு எம்.பிக்கள் காண்பித்தாலும், உண்மையில் இப்பொழுது கூட்டமைப்பில் யாரும் எனக்கு எதிராக இல்லை, அனைவரும் என்னை ஆதரிக்கிறீர்கள். நாம் இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்