30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ரணில்- ஐ.ம.ச இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது, உத்தேச நாடாளுமன்றக் குழு அமைப்பு மற்றும் அரசியலமைப்பின் 19வது திருத்தம் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிற்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பில் எஸ்.ஜே.பியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறினார்.

பாராளுமன்ற குழு அமைப்பு மூலம் அரசாங்கத்திற்கு சாதகமான அம்சங்களில் ஆதரவளிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க கூறினார்.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கான தங்கள் உள்ளீடுகளை எதிர்க்கட்சிகளும் முன்வைக்கும் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment