கல்கிஸை நீதவான் நீதிமன்ற குற்றவாளி கூட்டில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய நேரத்தில், சந்தேக நபர் பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.




