ரணில் வென்றிருக்காவிட்டால் நிறைவேற்றதிகாரம் ஒழிந்திருக்கும்!

Date:

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படாமலிருந்தால், நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே நாட்டின் கடைசி நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தானும் தனது குழுவினரும் சர்வகட்சி அரசாங்கத்துக்காக குரல் எழுப்பியதாகத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் எதிரணியில் அமரவும் தமது அணி தயங்கப்போவதில்லை என்றும் அழஹப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்