29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பிரதமர் இராஜினாமா செய்வதெனில் 13ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தது யார் என்பதற்கான ஆதாரங்களை நாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இல்லத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார, இந்த சம்பவம் இனந்தெரியாத சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு தாக்குதல் என தெரிவித்தார்.

பிரதமர் விக்ரமசிங்க பதவி விலகுவாரா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, அந்தக் கேள்வியை பிரதமரிடமே கேட்க வேண்டும் என்றார்.

பிரதமர் விக்ரமசிங்க தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தனது இராஜினாமாவை எவ்வாறு தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் இராஜினாமா செய்யுமாயின் அது எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment