பிரதமர் இராஜினாமா செய்வதெனில் 13ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!

Date:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தது யார் என்பதற்கான ஆதாரங்களை நாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இல்லத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார, இந்த சம்பவம் இனந்தெரியாத சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு தாக்குதல் என தெரிவித்தார்.

பிரதமர் விக்ரமசிங்க பதவி விலகுவாரா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, அந்தக் கேள்வியை பிரதமரிடமே கேட்க வேண்டும் என்றார்.

பிரதமர் விக்ரமசிங்க தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தனது இராஜினாமாவை எவ்வாறு தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் இராஜினாமா செய்யுமாயின் அது எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்