பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி எதிர்க்காது!

Date:

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதை ரத்து அதிகாரத்தால் தடுக்கப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.

4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், 3 நாடுகளும் ஒன்று மற்றதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டன.

அதை அடுத்து, பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விண்ணப்பத்தைத் தொடரலாம்.

அவை நேட்டோவில் இணைவதற்குத் துருக்கியின் ஆதரவை உறுதிப்படுத்தும் இணக்கக் குறிப்பில் 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பின்லாந்து ஜனாதிபதி கூறினார்.

ரஷ்யாவை சூழ உள்ள நாடுகளை நேட்டோவில் இணைத்து வருகிறது அமெரிக்கா. இதனை ரஷ்யா பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இந்த காரணத்தின் அடிப்படையிலேயே உக்ரைக் மீது போர் தொடுத்ததாக கருதப்படுகிறது.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விருப்பத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தன.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்