சுகாதரத்துறையின் சில பிரிவுகள் பணிப்பகிஸ்கரிப்பு!

Date:

துணை கூட்டு சுகாதார தொழிற்சங்கத்தின் எட்டு துறைகள் இன்றும், நாளையும் பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் பல துறைகள் பணிக்கு வரமாட்டார்கள்.

மருத்துவமனைகளில் உள்ள PHI அதிகாரிகள், ECG மற்றும் EEG தொழில்நுட்ப வல்லுநர்கள், மலேரியா மற்றும் டெங்கு பரிசோதகர்கள், பல் மருத்துவ சங்கங்கள் மற்றும் COVID-19 தடுப்பூசி நிர்வாகிகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு பணிக்கு வரமாட்டார்கள் என ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மகப்பேறு மற்றும் சிசு சிகிச்சை நிலையங்களும் இயங்காது எனவும் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வீட்டு பிரசவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், வீட்டுப் பிரசவத்தில் ஈடுபடும் அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

போதனா மற்றும் ஆதார வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய பொது வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்து விநியோகங்கள் என்பன தடைப்படும் என உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரோஹன தெரிவித்தார்

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்