நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று (17) இரவு முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது.
இன்று முதல் 75 நாட்களுக்குள் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் இணை செயலாளர் எரங்க குடஹேவ தெரிவித்தார்.
பராமரிப்பு பணியினால் மின்சாரத் தடைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த குடஹேவ, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக உற்பத்தியாளர் மீதான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறினார்.
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்த குடஹேவ, பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும், அதேவேளையில் மின்சாரத் தடைகள் எதுவும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதைத் தொடர, போதுமான அளவு டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு தேவைப்படும் என்று குடஹேவ கூறினார்.
எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு ஜெனரேட்டரை நிறுத்துவதால், மின்வெட்டு காலத்தை அதிகரிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்புகிறார்.
சுமார் 300 மெகாவாட் மின் பற்றாக்குறையை நீர்மின் நிலையங்கள் மற்றும் ஏனைய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் அதிகரித்த உற்பத்தி மூலம் ஈடுசெய்ய முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




