25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் 5 வருடங்கள் வெளிநாடு செல்லலாம்!

அரச உத்தியோகத்தர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல அனுமதிப்பது தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்கள், அரச சேவையில் அவர்களின் பணிமூப்பு அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாது என உத்தரவாதம் வழங்கப்படும்.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. அவர் புதிய கொள்கையை விளக்கும் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான அனுமதியைப் பெறுவார்.

ஏற்கனவே ஊதியத்துடன் அல்லது ஊதியம் இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் எந்த ஒரு பொது ஊழியரும், மேலும் ஊதியம் இல்லாத விடுமுறையை நாடும் எந்த ஒரு பொது ஊழியரும், நாடு திரும்பாமல், தேவையான முறையான அனுமதியைப் பெறவும் இந்த முன்மொழிவு அனுமதிக்கும்.

விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளரிடம் வழங்கப்பட உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment