அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் 5 வருடங்கள் வெளிநாடு செல்லலாம்!

Date:

அரச உத்தியோகத்தர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல அனுமதிப்பது தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்கள், அரச சேவையில் அவர்களின் பணிமூப்பு அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாது என உத்தரவாதம் வழங்கப்படும்.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. அவர் புதிய கொள்கையை விளக்கும் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான அனுமதியைப் பெறுவார்.

ஏற்கனவே ஊதியத்துடன் அல்லது ஊதியம் இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் எந்த ஒரு பொது ஊழியரும், மேலும் ஊதியம் இல்லாத விடுமுறையை நாடும் எந்த ஒரு பொது ஊழியரும், நாடு திரும்பாமல், தேவையான முறையான அனுமதியைப் பெறவும் இந்த முன்மொழிவு அனுமதிக்கும்.

விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளரிடம் வழங்கப்பட உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்